search icon
என் மலர்tooltip icon
    • நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
    • தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.

    தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

    தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

    கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, சிறிய கட்சிகள் காங்கிரசுடன் இணையும் என சரத் பவார் கூறுகிறார்.
    • இதற்கு அர்த்தம் போலி தேசியவாத காங்கிரஸ் கட்சியும், போலி சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே) காங்கிரசுடன் இணைய முடிவு செய்துள்ளன என்பதுதான்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டமாக பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 4-ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 11 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருவதால், முக்கிய தலைவர்கள் மராட்டியத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நந்தூர்பர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஹீனா காவித் எம்.பி.க்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

    மராட்டியத்தில் கடந்த 40-50 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக பணியாற்றிய ஒரு பெரிய தலைவர் (சரத் பவார்) பாராமதி வாக்குப்பதிவுக்கு பிறகு கவலை அடைந்துள்ளார். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, சிறிய கட்சிகள் காங்கிரசுடன் இணையும் என அவர் கூறுகிறார்.

    இதற்கு அர்த்தம் போலி தேசியவாத காங்கிரஸ் கட்சியும், போலி சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே) காங்கிரசுடன் இணைய முடிவு செய்துள்ளன என்பதுதான். ஆனால் காங்கிரசுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுடன் நீங்கள் இணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும்.
    • மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌.

    அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொறு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் நாள் திருதியை திதியில் அட்சய திருதியை சுப தினமாக கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும். அதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.

    தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான்.

    இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

    அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.

    அதன்படி, மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    இரு தினமும் காலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.

    இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு லலிதா ஜூவல்லரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தங்க நகைகள் மீதான சேதாரம் ஒரு சதவீதம் குறைத்து சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வைர நகைகள் மீது கேரட்டுக்கு ரூ.5 ஆயிரம் குறைக்கப்படுகிறது.

    இந்த சலுகை கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நாளை தினம் அட்சய திரிதியை என்றாலும், இந்த சலுகை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து லலிதா ஜூவல்லரி அறிவித்துள்ளது.

    • தோசை கல்லை தேய்க்கும் காட்சிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும்.
    • 4.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள வீடியோ சுகாதார உணவு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    உணவு பிரியர்களுக்காக சமூக வலைதளங்களில் வெளியாகும் புதுப்புது உணவு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் அதிக அளவில் வெளியாகி வருகிறது. அவற்றில் பல வீடியோக்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கின்றன.

    அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில், இறைச்சி சமையலின் போது பெண் ஒருவர் சாஸ் தேய்ப்பதற்காக துடைப்பத்தை (மாப்) நனைத்து பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. வழக்கமாக ஓட்டல்களில் தோசை உள்ளிட்ட சில உணவு வகைகள் தயாரிக்கும் போது துடைப்பத்தால் தோசை கல்லை தேய்க்கும் காட்சிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவும் சமூக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    அதே நேரத்தில் 4.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ சுகாதார உணவு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
    • மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் ஸ்கூட்டி ஓட்டி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள பிலிபித் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.

    இதற்கிடையே அந்த நர்ஸ் தனது ஸ்கூட்டியில் மருத்துவமனையை சுற்றி ஓட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நர்சின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    • பட்டாசு ஆலையில் இருந்த 10 அறைகள் தரைமட்டமாகின.
    • மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன.

    இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். பல மாதங்களுக்கு நீடித்த இந்த போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

    ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது.

    இந்த நிலையில் இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து தற்போது அவரது மந்திரி சபையில் நீதி மந்திரியாக இருக்கும் விஜேயதாச ராஜபக்சே போட்டியிடுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நீரஜ் சோப்ரா 88.36 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
    • செக் குடியரசு வீரர் 88.38 மீட்டர் தூரம் எறிந்து முதுல் இடம் பிடித்தார்.

    கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் நடைபெற்று வருகிறது. தடகள போட்டியில் ஒன்றான ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நீரஜ் சோப்ராவுக்கும், செக்குடியரசு வீரர் ஜாக்கப் வாட்லெஜ்-க்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. ஜாக்கப் வாட்லெஜ் 88.38 மீட்டர் தூரம் வீசி முன்னிலை வகித்தார்.

    நீரஜ் சோப்ரா 4-வது முயற்சியில் 86.18 மீட்டர் வீசியிருந்தார். ஆனால் ஐந்தாவது முயற்சியில் 82.28 மீட்டர் தூரமே சென்றது.

    6-வது மற்றும் கடைசி முயற்சியில் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வீசினார். இதனால் ஈட்டி சீறிப்பாய்ந்து முன்னோக்கி சென்றது. ஆனால் 88.36 மீட்டர்தான் சென்றது.

    2 சென்டி மீட்டர் குறைந்ததால் முதல் இடம் வாய்ப்பை இழந்தார். இதனால 2-வது இடம் பிடித்தார். கிஷோர் ஜெனா 76.31 மீட்டர் எறிந்தார். கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர் 85.75 மீ்ட்டர் தூரம் வீசி 3-வது இடம் பிடித்தார். தோகா டைமண்ட் லீக் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது.

    • 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

    எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர்.

    இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த துறையினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்கள் மற்றும் செல்போன்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும்.

    இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக போலீசாருக்கு அழைப்புகள் வந்துள்ளன.
    • பல வீடுகளும் சேதம் அடைந்துள்ளதாக அழைப்புகள் வந்துள்ளன.

    இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. 100 டிகிரி ஃபாரன்ஹிட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலை காரணமாக பகல் நேரத்தில் மக்கள் வெளியே தலைக்காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக ஒரு சில இடங்களில் மழையும், சில இடங்களில் கன மழை பெய்தும் குளிர்வித்தது.

    தற்போது வானிலை சற்று மாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் டெல்லி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று புழுதிப் புயல் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக டெல்லி மாநிலத்தன் பெரும்பாலான பகுதி பாதிப்புக்குள்ளானது.

    இந்த நிலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தாக 152 அழைப்புகள் வந்துள்ளது. கட்டடங்கள் சேதமடைந்ததாக 55 அழைப்புகள் வந்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு தொடர்பாக 202 அழைப்புகள் வந்துள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×